tamilnadu

ஊராட்சி செயலாளர் பணியிடங்களை முறைப்படி நியமிக்கக் கோரிக்கை

சீர்காழி, நவ.14- கொள்ளிடம் பகுதியில் காலியாக உள்ள பணியிடங்க ளில் ஊராட்சி செயலாளர்க ளை முறைப்படி நியமனம் செய்ய வலியுறுத்தப்பட்டுள் ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆச்சாள்புரம் மற்றும் புத்தூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் ஊராட்சி செய லாளர் (பஞ்சாயத்து கிளார்க்)  பணியிடம் காலியாக உள்ளது. இந்த இரண்டு பணி யிடங்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்பு வதற்கு நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் கிராம ஊராட்சிக்கான தனி அலுவலரிடமிருந்து கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி புத்தூரில் உள்ள காலிப் பணியிடத் துக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் அருந்ததியினர் வகுப்பினருக்கு முன்னுரி மையும் ஆச்சாள்புரம் பணி யிடத்துக்கு பொது இட ஒதுக் கீடும் அறிவிக்கப்பட்டுள் ளது. விண்ணப்பம் செய் வோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது வகுப்பினர்க்கு 18 முதல் 35 வயது வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் 25 ஆம் தேதி வரை மாவட்ட தனி அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அறிவிப்பு வெளி யாகியுள்ளது.  இந்நிலையில் ஊராட்சி செயலாளர் பணியிடங்க ளுக்கு ஒரு தலைப்பட்சமாக ரூ.10 லட்சம் வரை பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்யும் வேலை மும்மர மாக நடைபெற்று வருவதா கக் கூறப்படுகிறது. குறிப் பிட்ட ஆளும் கட்சியினர் சார்பில் ஆள் சேர்ப்பு நடை பெறுவதாகக் கூறப்படுகி றது.  தகுதியிருந்தும் ஏழை எளி யவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைப்பதை தட்டிப் பறிக்காமல் முறை யாக நேர்காணல் நடத்தி  தகுதியான ஏழை எளியவர்க ளுக்கு கையூட்டு ஏதும் இல் லாமல் ஊராட்சி செயலாளர் பணி வழங்க மாவட்ட ஆட்சி யர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனைக் கண் காணிக்க உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.