சீர்காழி, டிச.2- கொள்ளிடத்தில் வடிகால் வாய்க் கால் ஆக்கிரமிப்பால் குடியிருப்பு களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் தோப்புத்தெரு, தைக்கால் ரகமத் தெரு ஆகிய இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குடி யிருப்புகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. கொள்ளிடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களுக்கு பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வரும் பக்கிரி வாய்க்கால் கொள்ளிடம் அருகே தைக்காலில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே ஆக்கிரமிக்கப்பட்டு அடைக்கப்பட் டுள்ளது. 500 மீட்டர் நீளமும் 27 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பக்கிரி தைக்கால் வாய்க்கால் பாதிக்கும் மேல் ஆக்கிரமிப்பில் உள்ளதால் குடி யிருப்புகளைச் சூழ்ந்துள்ள தண்ணீர் உடனடியாக வடியாமல் தேங்கி யுள்ளது. கடந்த 5 வருடங்களுக்கும் முன்பு இப்பகுதியில் தேங்கும் அதிகப்படி யான மழைநீர் மிக எளிதில் விரை வில் வடிந்தது. ஆனால் தற்பொழுது ஒரு நாள் இரவு பெய்த மழையிலேயே தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளது. இதனால் குடியிருப்புகளில் உள்ள தண்ணீர் வடியாமல் தெருவோரத் தில் உள்ள சாக்கடையில் கலந்து தேங்கி நிற்கிறது. தொடர்ந்து மழை பெய்தால் வீடு களுக்குள் தண்ணீர் புகுந்து வீடுக ளுக்குள் குடியிருக்க முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆக்கிரமிப்பில் அகப்பட்டுள்ள பக்கிரி தைக்கால் வாய்க்காலை மீட்டு ஆழ்படுத்தி, அகலப்படுத்தி தூர்வார உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் தைக்காலைச் சேர்ந்த பக்கீர் முகமது, மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.