தரங்கம்பாடி, மே 13- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்துக்கு உட்பட்ட ஆக்கூர் பகுதிகளிலுள்ள ஆட்டோ, கார், கனரக வாகன ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளிகள், முடி திருத்துவோர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறி மற்றும் ரூ.500 ரொக்கம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை தனிநபர் இடைவெளியை பின்பற்றி பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் செம்பை வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சுந்தர்ராஜன், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் கபடி பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் ராஜ் கண்ணன் உள்ளிட்டோ் கலந்து கொண்டனர்.