tamilnadu

img

ராஜ் வித்யாலயா கல்வி குழுமத்தின் வெள்ளி விழா ஆண்டு துவக்கம்

தரங்கம்பாடி, டிச.4- நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில் 25 ஆண்டுகளாக கல்வி பணியாற்றி வரும் ராஜ் வித்யாலயா கல்வி குழுமத்தின் வெள்ளி  விழா ஆண்டு துவக்க விழா பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது.  ராஜ் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் இரா.பாண்டியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஹேம லதா வரவேற்புரையாற்றினார். மயிலாடு துறை அருண்பிரியா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் இரா.செல்வம், பட்டிமன்ற நடுவர் மற்றும் நகைச் சுவை பேச்சாளர் ஆடுதுறை அழகு.பன்னீர் செல்வம், கவிஞர் வீதி.முத்துக்கணியன் ஆகி யோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வெள்ளி விழா கொண்டாட்டத் தின் துவக்கமாக 25 ஆம் ஆண்டு நினைவுச் சின்னம் வெளியிடப்படட்து. தொடர்ந்து பள்ளி மாணவ - மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்கு வழி காட்டும் வகையில் கல்வி திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற துவக்க விழா மற்றும் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் மாணவ - மாணவிகள், ஆசிரியர்கள், பணியா ளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளி நிர்வாகப்பிரிவு ஆசிரியை மங்களகௌரி நன்றியுரை யாற்றினார்.