tamilnadu

img

காலமானார்

நாகப்பட்டினம், ஜூன் 01- கீழ்வேளூர் ஒன்றியம், திருப்பஞ்சனம் கிராமத்தில் உடல்நலக் குறை வால் வெள்ளிக்கிழமை காலை அ.அன்னபாக்கியம்  காலமானார். சனிக்கிழமை காலை 11.30 மணியள வில் அவரது இறுதி நிகழ்வு நடை பெற்றது. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், கட்சியின் கீழ்வேளூர் ஒன்றியச் செயலா ளரும் நாகப்பட்டினம் முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவருமான ஜி.ஜெயராமனின் அன்னையாவார், அவரது மறைவையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகை மாலி, கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பின ருமான வி.மாரிமுத்து ஆகியோர் அன்னாரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.முருகையன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.என்.அம்பிகாபதி, என்.எம்.அபுபக்கர், பி.டி.பகு, பி.கே.ராஜேந்திரன் மற்றும் சிபிஎம் கீழ்வேளூர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர்.