tamilnadu

img

புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு கருத்தரங்கு

நாகப்பட்டினம், செப்.3- புதிய கல்விக் கொள்கையின் வரை வை ஏன் திரும்பப் பெறவேண்டும்?’ எனும் பொருளில் நாகப்பட்டினம் ஒன்றி யம், சிக்கலில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்டக்குழு சார்பில் ஞாயிற் றுக்கிழமை கருத்தரங்கம் நடை பெற்றது. வாலிபர் சங்க நாகை ஒன்றி யச் செயலாளர் ஏ.வடிவேல் தலைமை வகித்தார்.  நாகை ஒன்றியத் தலைவர் பி.எம். நன்மாறன், கீழ்வேளூர் ஒன்றியத் தலை வர் டி.சந்திரகுமார், திருமருகல் ஒன்றி யத் தலைவர் எம்.எஸ்.பிரபாகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் ஏ.சியாமளா வரவேற்பு ரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் துவக்கவுரை யாற்றினார். ‘இலக்கை நோக்கி’ எனும் பொருளில் மாவட்டத் தலைவர் ஏ.சிவ குமார் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.சதீஸ், எம்.எஸ்.ஜோதிநாதன், எஸ்.மாலா ஆகியோர் உரையாற்றினர்.  வாலிபர் சங்க மாநிலச் செயலா ளர் எஸ்.பாலா சிறப்புரையாற்றும் போது, “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவானது, 484 பக்கங்க ளில் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட் டுள்ளது. ஏனெனில் தமிழர்கள் உட்பட மற்ற மொழிக்காரர்கள் முழுமையாகப் படித்து புரிந்து கொள்ளக் கூடாது என்ப தற்காகத்தான். . கல்வி என்பது தரம், இலவசம், விஞ்ஞானம் ஆகிய வற்றைக் கொண்டனவாக இருக்க வேண்டும். இவை மூன்றும் புதிய கல்விக் கொள்கையில் இல்லை. ஏழை எளிய மாணவர்களுக்கு உயர் கல்வி மட்டுமல்ல, சாதாரண பட்டப் படிப்புக் கூட எட்டாக் கனியாகிவிடும்.  இது புராண இதிகாச, சனாதனக் கல்விக் கொள்கையாகும். இது திரும்பப் பெறும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என்றார். சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் நாகைமாலி நிறைவுரையாற்றும் போது, பாசிசக் கல்விக் கொள்கை போல் இது மோசமான பாசிச, இந்துத்வா கல்விக் கொள்கையா கும். துரோணாச்சாரி, ஏகலைவனின் கட்டை விரலைக் குருதட்சணையாகக் கேட்டது போல் நாட்டின் தாழ்த்தப்பட்ட, மலையின, பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மாணவர்களின் கட்டை விரல் களைப் பலி கொடுக்கவே இந்தப் புதிய கல்விக் கொள்கை அமைக்கப் பட்டுள்ளது. இது எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல; எரிக்கப்பட வேண்டியதும் என்றார்.