ஆதரவற்ற குழந்தைகள்தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம், மே 16-நாகப்பட்டினம் அன்னை சத்யா அரசுக் குழந்தைகள் காப்பகத்தில் தங்கிக் கல்வி பயில விரும்பும் ஆதரவற்ற குழந்தைகள் ஜூலை-31 க்குள் விண்ணப்பிக்கலாம். மாணவி எனில், 1 முதல் 12 வகுப்பு வரையிலும், மாணவருக்கு 1 முதல் 5 வகுப்பு வரையிலும் தங்கிப் பயிலலாம்.மேலும் விவரங்களை, நாகப்பட்டினம் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் பின்புறமுள்ள அன்னை சத்யா அரசுக் குழந்தைகள் காப்பகம், சாமந்தான்பேட்டை, பால்பண்ணைச் சேரி எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யாத விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை
தஞ்சாவூர், மே 16-தஞ்சை மாவட்டத்தில் நெல், கடலை, மக்காச்சோளம்,எள், பயறு வகை பயிர்கள் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்படுகிறது. இவற்றை பயிரிட வேளாண் துறை மட்டுமின்றிதனியார் விதை உற்பத்தியாளர்களும் விதைகளை உற்பத்தி செய்து விற்று வருகின்றனர். விற்பனையை ஒழுங்குமுறை படுத்த தனியார் மற்றும் வீரிய ரகங்களை, கோவைவிதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறையில் பதிவுசெய்து எண் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் மாவட்டத்தில் விதை விற்பனைசெய்யப்படும் தனியார் ரகங்கள் மற்றும் வீரிய ரகங்கள்அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். பதிவுசெய்யப்படாத ரகங்களை, விற்பனையாளர்கள் இருப்பு வைத்து இருந்தாலோ, விற்பனை செய்தாலோ, அவர்கள்மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விதைஆய்வு துணை இயக்குனர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.