போட்டி தேர்வுகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி
தரங்கம்பாடி, பிப்.6- நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் போட்டி தேர்வுகளுக்கான விழிப்பு ணர்வு பயிற்சி பட்டறை கல்லூரி முதல்வர் ஜீன்ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. ரைஸ் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் இராஜாராமன் சிறப்புரையாற்றினார். வணிகவியல் துறை தலைவர் சேவியர் செல்வக் குமார், முன்னாள் துறைத் தலைவர் மரியலாசர், அரச.முருகுபாண்டியன் மற்றும் துறையின் பேராசிரியர்கள் உரையாற்றினர். 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பொன்னமராவதி, பிப்.6- பொன்னமராவதி ஒன்றியத்தில் பயிலும் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சிதம்பரம் பதின்ம மேல்நிலைப் பள்ளி, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சிதம்பரம் பதின்ம பள்ளி இயக்குனர் சிதம்பரம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் முருகேசன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பொன்னமராவதி ஒன்றிய குழுத்தலைவர் சுதாஅடைக்கல மணி, வட்டாரக்கல்வி அலுவலர் ராஜாசந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, சுமார் 60 அரசு பள்ளி மாணவர்களுக்கு 32 பொருட்கள் அடங்கிய பையினை வழங்கினார். பள்ளி தனி அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.