tamilnadu

நாகப்பட்டினம், திருவாரூர் முக்கிய செய்திகள்

பழுதான கட்டடத்தில் வேளாண் கிடங்கு பாழாகும் விதை நெல் மூட்டைகள், உரங்கள் 
சீர்காழி, செப்.5- கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் கிடங்குக்கு வேளாண் துறைக்குச் சொந்தமான இடத் தில் புதிய கட்டடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் வேளாண் பொருட்கள் வைக்கப்படும் கிடங்கு ஆகிய கட்டடங்கள் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சொந்தமான இடத்தில் செயல்படுகிறது. இங்கு விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் மற்றும் விவசாய இடுபொருட்கள் எடுத்துச் செல்வ தில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வரும் இந்தக் கட்டிடம் 20 வருடத்திற்கும் மேல் பழ மையானது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான வெளிப் புற கேட் மூடப்பட்டதால் வேளாண் அலுவலகத்திற்கான கிடங்கிற்கு விவசாயிகள் செல்வது தடைபடுகிறது. இதனால் விவசாயிகள் உரிய நேரத்தில் அலுவலகத்துக்கு வந்து செல்வதும் சிரமமாக உள்ளது. தற்பொழுதுள்ள கட்டடமும் மழை நீர் கசிவால் உரங்கள் மற்றும் விதை நெல் மூட்டைகள் பாதிக்கப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் இங்குள்ள கட்டி டத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டு மென்றால் ஊராட்சித் துறையிடமிருந்து அனுமதி கிடைக்காத நிலை உள்ளது.  எனவே வேளாண் துறைக்குச் சொந்தமான இடத்தில் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் இடத்துக்கு புதிய கட்டிடம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக கொள்ளிடம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சிவப்பிரகாசம் தெரி வித்தார்.

வேப்பதாங்குடி பாலப் பணி 
திருவாரூர், செப்.5- திருவாரூர் வட்டம் வஞ்சியூர் கிராமத்தில் சித்தாற்றின் குறுக்கே மத்திய கிராம சாலைகள் திட்டம் பிரிவு 2-ன் கீழ் ரூ.2 கோடியே 38 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் வேப்ப தாங்குடி- வஞ்சியூர் இணைப்பு பாலம் கட்டப்பட்டு வரு வதை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஆய்வில் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.