தரங்கம்பாடி, ஜூலை 26- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், கிடாரங்கொண் டான் கிராமத்தில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வட்ட செயல்முறை கிடங்கில் அரசு மூலம் குறைந்த விலையில் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு விற்பனை செய்யப்படும் சிமெண்ட் மூட்டைகள் வழங்கு வதில் தொடர்ந்து முறைகேடு நடப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆக்கூர் பகுதியில் செயல்பட்டு வந்த கிடங்கு தற்போது கிடாரங்கொண்டான் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக இயங்கி வருகிறது. செம்பனார்கோவில், கீழையூர், ஆக்கூர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் வீடு கட்ட கட்டுமான பணிக்கு இக்கிடங்கில் விண்ணப்பித்து மூட்டை ஒன்று ரூ190 என 50 மூட்டை,100 மூட்டை என வாங்கி கொள்ளலாம். விண்ணப்பித்து 15 நாட்களில் சிமெண்ட் மூட்டைகளை பயனாளிகளுக்கு தரு வதற்கு பதிலாக 2 மாதங்கள் கடந்து மிக தாமதமாக வழங்கு வதோடு 50 மூட்டைக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை லஞ்ச மாக பொறுப்பு அதிகாரி கட்டாயமாக மக்களை மிரட்டி வாங்குகின்றனராம். மேலும் கிடங்கு நுழைவாயில் காவலருக்கு சில நூறு களை தந்தால் தான் வாகன அனுமதியும் உண்டாம். ஏழை மக்கள் வீடு கட்டுவதே பெரும் சவாலாக உள்ள நிலையில் அரசு மானிய விலையில் வழங்கும் சிமெண்ட் மூட்டைகளை ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு வழங்கு வது கடும் கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் கே.பி.மார்க்ஸ் கூறியுள்ளார். அதிகாரம் படைத்தவர்களுக்கு முறைகேடாக துரி தமாக வழங்குவதாகவும், அந்த மூட்டைகளை அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும் வாடிக்கையாகவும் இப்பகுதியில் நடந்து வருகிறது. உட னடியாக மாவட்ட நிர்வாகம் இந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இல்லையெனில் போராட்டம் நடத்துவோம் என கே.பி.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.