சீர்காழி, அக்.1- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோதண்ட புரம் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் கொள்ளிடம் வட்டார சுகாதாரத் துறை மற்றும் ரோட்டரி கிளப் ஆகியவை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் ஆச்சாள்புரத்தில் நடைபெற்றது. முகாமை கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் பபிதா தலைமையேற்று துவக்கி வைத்தார். பொது மருத்து வம், சித்த மருத்துவம் மற்றும் அனைத்து வியாதிகளுக் கும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு இலவச மருந்து கள் வழங்கப்பட்டன. முகாமில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். ரோட்டரி சங்க மாநில ஆளுநர் ஷாஜகான், கொள்ளி டம் ரோட்டரி சங்க செயலாளர் குமார், நாட்டு நலப்பணித் திட்ட முகாம் அலுவலர் அய்யப்பன், கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார அலுவலர் அன்புராஜ் மற்றும் அலு வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.