நாகப்பட்டினம், ஜூன் 2- தூர்வாரும் பணி முறை கேடு இல்லாமல் வெளிப் படைத் தன்மையோடு நடை பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி நாகப்பட்டினம் பொ துப்பணித் துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.என்.அம்பிகாபதி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாள ரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகை மாலி, கோரிக்கைகளை விளக்கிச் சிறப்புரையாற்றி னார்.
மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பி.கே ராஜேந்தி ரன், பி.டி.பகு, ப.சுபாஸ்சந்திர போஸ், நாகை நகரக் கிளைச் செயலாளர் (பொ) சு.மணி, விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர் பி.சந்திரன், நாகை ஒன்றியச் செயலா ளர் என்.வடிவேல், நாகை ஒன்றியத் தலைவர் ஜி.முரு கையன், கடலோரக் கிளைச் செயலாளர் கந்தசாமி, கீழ்வே ளூர் ஒன்றியத் தலைவர் கே.எஸ்.கோபாலன், ஒன்றி யச் செயலாளர் ஆர்.முத்தை யன், கீழையூர் ஒன்றியச் செயலாளர் கே.கிருஷ்ணன், தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் டி.செல்லையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.