திருவாரூர், மே 21- விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில் கோரிக்கை மனு திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரனிடம் அளிக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனி வேல், ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர்கள் ஜி. பவுன்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.