சீர்காழி, பிப்.11- நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் சீனிவாசா சுப்ப ராயா அரசு தொழில்நுட்பக் கல்லூ ரியில் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் மற்றும் சுகாதார நோய்த் தடுப்பு மருந்தியக்கம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடை முறைகள் குறித்த விளக்கக் கூட் டம் நடைபெற்றது. மாவட்ட நோய் தடுப்பு வல்லு நர் மற்றும் துணை இயக்குநர் லியாகத் அலி தலைமை வகித் தார். கல்லூரி பொறுப்பு முதல்வர் பாலசுப்பிரமணியன் வரவேற் றார். கொள்ளிடம் வட்டார மருத் துவ அலுவலர் பபிதா, கொரோனா வைரஸ் பற்றி விளக்கமளித்துப் பேசினார். கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி களின் முதல்வர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்நோய் குறித்த பல்வேறு சந்தேகங்க ளுக்கு நோய்த் தடுப்பு வல்லுநர் லியாகத் அலி விளக்கமளித் தார். மேலும் அனைத்து கல்லூரிகளி லும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறி வுறுத்தப்பட்டது. தமிழரசி நன்றி கூறினார்.