சீர்காழி: கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் கட்டப்பட்டுள்ள அரசு கால்நடைப்பட்டி குப்பை மேடாக காட்சியளிக்கிறது. நாகை மாவட்டம் கொள்ளி டம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியின் பின்புறத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு புதியதாக கால்நடைப்பட்டி கட்டப்பட்டது. தெருப் பகுதியோ அல்லது வயல்வெளியிலோ மேயும் ஆடு உள்ளிட்ட கால்நடைகளை பிடித்து வந்து அடைத்து பாது காக்கும் வகையில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் கட்டப்பட்டது. இதன் பின் ஒரு வருடத்திற்கு பிறகு பெயரளவில் திறக்கப்பட்ட இந்த கால்நடைப் பட்டி எந்த பயனும் இன்றி குப்பை கொட்டும் இடமாக உள்ளது. இந்த கால்நடைப்பட்டி குப்பை கள் கொட்டப்பட்டு சுகாதாரம் இன்றி காணப்படுகிறது. இப்பட்டியின் முன்பகுதியில் அமைந்துள்ள இரும்பு கேட்டும் பழுதடைந்தும் உடைந்தும் உள்ளது. பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷச் சந்துக்கள் குடியிருக்கும் இடமாகவும் இருந்து வருகிறது. எனவே குப்பை கொட்டுமிடமாக இருந்து வரும் இந்த பாழடைந்த கால்நடைப்பட்டிக் கட்டிடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.