சீர்காழி, ஜூன் 20- நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் அனைத்து வகையான ஆய்வகத்தில் ஒரு சில ஆய்வுகள் அதிக ரூபாய்க்கு பெறக் கூடிய குறிப்பாக தைராய்டு, மஞ்சள்கா மாலை போன்ற ஆய்வுகளை அரசு மருத்து வமனையில் ஆய்வு செய்யாமல் அதை மரு த்துவமனையில் பணியாற்றக் கூடிய ஆய்வக ஊழியர்கள் தன்னுடைய சொந்த பரிசோ தனை மையத்திற்கு சிபாரிசு செய்வதாகவும், ஆய்வுக்காக வரும் ஏழை - எளிய கர்ப்பிணி பெண்களுக்கு எடுக்கக்க கூடிய தைராய்டு, மஞ்சள் காமாலை போன்ற பணம் அதிக மாக பெறக்கூடிய ஆய்வுகளை அரசு இலவச மாக வழங்கியும் அதை அரசு மருத்துவம னையில் பணிபுரியும் பணியாளர்கள் பின்பற்றுவதில்லை. மேலும் ஏழை, எளிய மக்கள் பயன் பெறுவ தற்காக அரசாங்கம் எவ்வளவோ உபகர ணங்கள் வழங்கியும் அது பயன்படுத்தப்ப டாமல் சுயலாபத்திற்காக தனியார் ஆய்வ கங்களுக்கு பரிந்துரைக்கும் அவலம் சீர்காழி யில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரத்த வங்கியிலும், ரத்தக் கொடையா ளர்கள் கொடுக்கும் ரத்தத்தை காசுக்கு விற்கும் அவலமும் தொடர்ந்து வருகிறது என சீர்காழி அரசு தலைமை மருத்துவம னைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் உள்நோயாளிகள் கூறி வருகின்றனர். இந்தப் போக்கை உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.