tamilnadu

img

ஏவிசி கல்லூரியில்  வாசிப்பு மன்றக் கூட்டம் 

 மயிலாடுதுறை, ஜூலை 18- நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள ஏ.வி.சி. கல்லுரியின் வரலாற்றுத் துறையின் வாசிப்பு மன்றக் கூட்டம் நடைபெற்றது. பொருளாதார துறை பேராசிரியர் முனைவர் எஸ்.செல்வி ஒரு கிராமம் நகரமாக மாறிய வரலாறு என்ற தலைப்பில் பேசினார். வரலாற்றுத் துறை விரிவுரையாளர்கள் டி.காளீஸ்வரன் மற்றும் என்.கதிர வன் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கான ஏற்பாடு களை இணைப் பேராசிரியர் முனைவர் கி.இரா.சங்கரன் செய்திருந்தார். சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பேராசிரியர் வி.இராஜேந்திரன் நன்றி கூறினார்.