கடன் தொல்லை: தொழிலாளி தற்கொலை
தேனி, செப்.3- தேனி அல்லிநகரம் வெங்கலாகோவில் தெரு வைச் சேர்ந்தவர் சேகர் (55). இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ள னர். அவர்களை படிக்க வைக்க பல்வேறு இடங்களில் சேகர் கடன் வாங்கிஉள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ள னர். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டிலேயே தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சுகாதாரமற்ற குடிநீர் வயிற்றுப்போக்கால் சிறுமி பலி
திருவள்ளூர், செப்.3- திருவள்ளூர் மாவட்டம், தாடூர் ஊராட்சிக்கு உட்பட்ட எல்.என்.கண்டிகை இருளர் காலணியில் 90க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த ரவி, அலமேலு ஆகியோரின் மகள் தமிழ்ச்செல்வி (2). இவர் கடந்த சில தினங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிறுமி தமிழ்ச்செல்வியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் ஞாயிற்றுக்கிழமை (செப். 1) இரவு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த னர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எல்.என்.கண்டிகையில், ‘சுகாதாரமற்ற குடிநீர்ரை பயன்படுத்துவதால் தான் சிறுமி உயிரிழந்தார் என பகுதிமக்கள் கூறுகிறார்கள். மேலும் எங்கள் பகுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதிகளை கண்காணித்து, நோய்களிலிருந்து எங்களை பாதுகாக்க வேண்டும்’ என்கின்றனர்.