tamilnadu

பிரதமர் கிசான் திட்ட மோசடியைத் தொடர்ந்து கர்ப்பிணி உதவித்தொகையிலும் மோசடி

தேனி:
தேனி அருகே கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கிய ரூ.2லட் சத்து 96ஆயிரம் உதவிப்பணத்தை மோசடி செய்ததாக தேனி மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துதலைமறைவான கிராம சுகாதார செவிலியர்,  அவரது கணவரை தேடி வருகின்றனர்.தமிழகத்தில் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய உதவி தொகையை போலி ஆவணம் தயாரித்து பல கோடி மோசடி நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தேனியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மாநில அரசு வழங்கும் உதவித்தொகையில் செவிலியர், அவரது கணவர் ரூ 2.96லட்சம் மோசடி செய்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடமலைக்குண்டு அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராகப் பணிபுரிபவர் டாக்டர் சுரேந்தர். இவர் தேனிமாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரில், “கண்டமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையகட்டுப்பாட்டில் மேலப்பட்டி துணைசுகாதார நிலையம் உள்ளது. இங்குகல்பனா  என்பவர் கிராமச் சுகாதாரசெவிலியராக பணிபுரிந்து வருகிறார்.ஆறு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் விபரங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசிபோடுதல், கருவுற்ற தாய்மார் களின் விபரத்தை உரிய ஆவணங்கள் மூலம் பதிவேற்றம் செய்வது, மகப்பேறு உதவித்திட்ட தொகையை பெற்றுத்தருதல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார். கல்பனாவும், அவரது கணவர் கதிரவபெருமாளும்  அரசு பணத்தை பயனாளிகளுக்குத் தராமல் ஏமாற்றி உள்ளனர்.

19.10.17 முதல் 24.12.19வரை பொய்யான முகவரி கொடுத்து சிறிது சிறிதாக  ரூ.2லட்சத்து 96ஆயிரம் மோசடி செய்துள்ளனர். இவ்வாறு புகாரில் குறிப்பிடப்பட் டுள்ளது.இதன்பேரில் செவிலியர் மற்றும்அவரது கணவர் மீது  வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் கணவன், மனைவியை தேடிவருகின்றனர்.