tamilnadu

img

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புதிய பாலம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நகராட்சி சார்பில் ரூ.4 கோடி செலவில் பெரியாறு முதல் கல்லாறு வரை தார்ச் சாலை போடப்பட்டது. கல்லாறு செல்லும் வழியில் சிற்றாறு உள்ளது. சிற்றாறை கடப்பதற்காக சமீபத்தில் சிறிய அளவில் பாலம் கட்டப்பட்டது. தற்போது பெய்த மழையில் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் புதிதாக கட்டப்பட்ட சிற்றாறு பாலம் தற்போது பெய்த மழையில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனை உடனடியாக சரி செய்ய நகராட்சிக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;