தூத்துக்குடி, மே 26- தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே கே.சண்முக புரத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் பிரேம்குமார் (25). பட்டதாரியான இவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியிடம் சில்மி ஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், கடம்பூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழ குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.