tamilnadu

போலீசார்- ஜெயராஜ் குடும்பம் இடையே முன்விரோதம் இருந்ததா? சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை

தூத்துக்குடி, ஜூலை 13- தந்தை- மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி களான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி காவல்துறையினர் அழைத்து சென்று தாக்கினார்கள். பின்னர் அவர்கள் 2 பேரும் கோவில்பட்டி ஜெயிலில் அடைக்கப்பட்டு அடுத்த டுத்து இறந்தனர். இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் வழக்கு குறித்த பல்வேறு ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன. இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

இதற்காக நெல்லையில் முகாம் அலு வலகம் அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் 2 குழுவாக பிரிந்து சாத்தான்குளம் சென்றனர். அங்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டிற்கு சென்று உறவினர்களிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் சாத்தான்குளம் அரசு மருத்துவ மனையில் 2 முறை விசாரணை மேற்கொண்டனர்.  இந்நிலையில் சி.பி.ஐ. அதிகாரி கள், சாத்தான்குளம் காவல் நிலை யம் சென்று விசாரணை நடத்தினர். போலீசாருக்கும், ஜெயராஜ் குடும் பத்துக்கும் முன்விரோதம் ஏதாவது இருந்ததா? உள்ளிட்டவை குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் காவல் நிலையத்திற்கு வெளியே தடுப்புகள் அமைத்து யாரும் உள்ளே செல்ல முடியாத படி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இந்த விசாரணை இரவு 7.40 மணி வரை நீடித்தது. பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் காரில் இருந்தவாறே பஜார் பகுதியில் இருந்த பென்னிக்ஸ் கடையை பார்வையிட்டு சென்றனர். சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை தீவிரம் அடைந்து உள்ளதால் இந்த வழக்கு சூடுபிடித்து உள்ளது.