tamilnadu

கிரேன் வாகனம் மோதி லாரி டிரைவர் பலி

தூத்துக்குடி, ஜூன் 3- தூத்துக்குடியில் கிரேன் வாகனம் மோதிய விபத்தில் லாரி டிரைவர் ஒரு வர் பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் கணேசபுரம் புதுத்தெரு வைச் சேர்ந்தவர் அப்துல் ஷரிப் மகன் மைதீன் ஷரிப் (65), லாரி டிரைவரான இவர் செவ்வாயன்று தூத்துக்குடி மீன் வளக் கல்லூரி எதிரே உள்ள செட்டில் லாரியை நிறுத்திவிட்டு, அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது  அவ்வழியே வந்த கிரேன் வாகனம் மோதி யதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தூத்துக்குடி தென் பாகம் காவல் ஆய்வாளர் கிருஷ்ண குமார் வழக்கு பதிந்து, கிரேனை ஓட்டி வந்த தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த போஸ்கோ மகன் ரெனால்ட் வயது (37) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

;