tamilnadu

தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் முக்கிய செய்திகள்

திமுக சார்பில் ஆதார் அட்டை திருத்தம் முகாம்
தூத்துக்குடி, செப்.22- தூத்துக்குடி சண்முகபுரத்தில் திமுக சார்பில் ஆதார் அட்டை திருத்தம் முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி 30வது வட்ட திமுக சார்பில் சண்முகபுரத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் பொது மக்களுக்கு தேவையான ஜாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ் வழங்குதல், வாக்காளர் அடையாள அட்டை திருத்தம், ஆதார் அட்டை முகவரி மாற்றம், பட்டா நகல், வில்லங்க சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பான்கார்டு போன்ற வைகளுக்கான சிறப்பு முகாம் ஞாயிறன்று தொடங்கியது. இம்முகாம் திங்களன்றும் நடைபெறுகிறது. இம்முகா மிற்கான ஏற்பாடுகளை திமுக பொது குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்டச் செயலாளர் செல்ல மாரீஸ்வரன் செய்திருந்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

தூத்துக்குடியில் லாரி கடத்தல் வாலிபர் கைது
தூத்துக்குடி, செப்.22- தூத்துக்குடியில் லாரியை கடத்தி ஓட்டி சென்ற வாலி பர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் மேலபிள்ளையார்குளம் பகுதி யினை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் சுப்பிரமணி யன் (40). லாரி டிரைவர். தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி யில் சரக்குகளை இறக்கிவிட்டு மீண்டும் லாரியில் தூத்துக் குடி மதுரை பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். சர்வீஸ் ரோட்டில் வண்டியினை நிறுத்தி விட்டு தேநீர் அருந்த சென்றாராம். பின்னர் வந்து பார்த்த போது லாரியை காண வில்லை என கூறப்படுகிறது.  இதனால் சுப்பிரமணியன் ஒரு பைக்கில் மதுரை ரோட்டில் சென்று பார்க்கும் போது அவரது லாரியை வேறொ ருவர் ஓட்டி சென்றது தெரியவந்தது. உடனே அவர் லாரி யை மறித்து நிறுத்தி அதை ஓட்டி சென்றவரை சிப்காட் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் லாரியை திருடி ஓட்டி சென்றது கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த பரமசிவன் மகன் கண்ணன் (30) என தெரிய வந்தது. அவரை கைது செய்து லாரியை போலீசார் மீட்ட னர்.

நாளை தச்சநல்லூர் சுற்றுவட்டாரங்களில் மின்தடை
திருநெல்வேலி, செப்.22- மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தச்ச நல்லூர் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தச்சநல்லூர், பாலாஜி அவென்யூ, சிவன்கோயில் தெற்கு தெரு, நல்மேய்ப்பர் நகர், செல்வவிக்னேஷ் நகர், சத்திரம் புதுக்குளம், பிராங்குளம், கோகுல்நகர், திருநெல்வேலி நகரம் சாலை -ஸ்ரீநகர், கிருஷ்ணாநகர், சேந்திமங்கலம், வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை சாலை, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், இருதய நகர் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகர்ப்புற செயற்பொறியாளர் சு.முத்துக் குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது: ஆட்சியர் அறிவிப்பு
திருநெல்வேலி, செப்.22- நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறாது என திருநெல்வேலி ஆட்சியர் அறி விப்பு வெளியிட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையமானது தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவைக்கு காலியாக உள்ள நாங்குநேரி சட்ட மன்றத் தொகுதிக்கு 21.10.2019 அன்று இடைத் தேர்தல் நடத்துவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் 21.09.2019 பிற்பகல் முதல் அமலில் உள்ளதால், திரு நெல்வேலி மாவட்ட ஆட்சியரால் திங்கட்கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், வரு வாய்த் துறையினரால் நடத்தப் படும் மனுநீதி நாள் முகாம் மற்றும் அம்மா திட்ட முகாம் ஆகியவைகள் மறு அறி விப்பு வரும் வரை நடைபெறாது என்பதால், பொதுமக்கள் கோரிக்கை ஏதேனும் இருந்தால் மனுவை மாவட்ட ஆட்சி யர் அலுவலக புகார் பெட்டியில் இட்டுச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மூதாட்டியிடம் ஆறரை பவுன் சங்கிலி நூதனை கொள்ளை
நாகர்கோவில், செப்.22- நாகர்கோவில் வடசேரி டிஸ்டிலரி சாலை மணியா நகரைச் சேர்ந்த அய்யம்பெருமாள் மனைவி கஸ்தூரி(75). இவர் சனிக்கிழமை மாலை கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் 2 பேர் கஸ்தூரி யை வழிமறித்து அவரிடம் இந்தப் பகுதியில் திருட்டு பயம் அதிகமாக உள்ளது. எனவே நீங்கள் அணிந்திருக்கும் தங்க சங்கிலியை கழற்றி பையில் வைத்துக்கொள்ளுங்கள் என கூறினர். இதை நம்பிய கஸ்தூரி, தான் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க சங்கிலியை கழற்றி அந்த இளைஞர்களிடம் கொடுத்தார். அவர்கள் அதை ஒரு காகிதத்தில் மடித்து திருப்பி அளித்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டனர். பின்னர் கஸ்தூரி அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது அதில் சிறு, சிறு கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இது குறித்து அவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்துவருகின்றனர்.

மனைவியை தாக்கி சிறை சென்றவர் மீண்டும் தாக்கி கொலை செய்தார்
நாகர்கோவில், செப்.22- கன்னியாகுமரி சிலுவை நகர் பகுதியை சேர்ந்தவர் மரிய டெல்லஸ் (42). நடைபாதை வியாபாரி. இவர் மனைவி அருள் சுனிதா (37). திரு மணமாகி 17 ஆண்டுகளான இவர்களுக்கு பிளஸ் டூ படிக்கும் மகனும், பத்தாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய மரிய டெல்லஸ், கடந்த ஓராண்டுக்கு முன்பு மனைவியை தாக்கி கைதாகி,15 நாள்கள் சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர், குடும்பத்தினர் சமரசம் பேசியதை அடுத்து, மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்து வந்தார். இந்நிலையில், சனியன்று வியாபாரம் முடித்து விட்டு வீடு சென்ற மரிய டெல்லஸ், குடிபோதையில் மனைவியை அடித்து கல்லால் தாக்கினார். இதில் ரத்த காயங்களுடன் கீழே விழுந்த அருள் சுனிதாவை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஆசாரிபள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியில் அவர் இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி பாஸ்கரன், பொறுப்பு ஆய்வாளர் ஜெயச்சந்திரன், உதவி ஆய்வாளர் அன்பரசு ஆகியோர் விசாரித்த னர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கன்னியாகுமரி காவல் துறையினர், வீட்டில் இருந்த மரிய டெல்லஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.