tamilnadu

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 3 ஆம் ஆண்டு நினைவு தினம்... கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் அஞ்சலி....

தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 3-ம் ஆண்டுநினைவு தினத்தை முன்னிட்டு, திமுக எம்.பி.கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.தூத்துக்குடியில் ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிராக கடந்த2018 ஆம் ஆண்டு நடைபெற்றபோராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் களின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி  திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி.,அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் தூத்துக்குடி  பழைய மாநகராட்சி முன்பாகதுப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் புகைப்படங் களுக்கு வணிகர் சங்க மாநிலதுணைத் தலைவர் பழரசம் விநாயக மூர்த்தி, பேராசிரியர் பாத்திமா பாபு உள்ளிட்ட  ஸ்டெர் லைட் எதிர்ப்பு குழுவினர், வணிகர் சங்கத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

;