headlines

img

பாஜகவின் பொய் வேடம் ஒருபோதும் எடுபடாது

இடஒதுக்கீட்டை நீக்கவும் மாட்டோம். நீக்க அனுமதிக்கவும் மாட்டோம் என்று அலறுகிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. மக்க ளவை தேர்தல் களத்தில் சமூக நீதி சார்பில் இட ஒதுக்கீட்டு பிரச்சனை ஒரு பேசு பொருளாகி யிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஏற்றுக்கொண்டு வலியுறுத்துகின்றன. ஆனால் பாஜக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீடு என்ற கோரிக் கையை இப்போதும் கூட ஏற்க மறுக்கிறது. இது தான் அவர்கள் பேசும் சமூகநீதியின் லட்சணம்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவாக்கப்பட்டதே மனுஅநீதியின் அடிப்படையிலான சாதிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகத்தான் என்பது உலகறிந்த ஒன்று. அந்த அமைப்பு துவ க்கப்பட்ட காலத்திலிருந்தே வாய்ப்பு கிடைக் கும் போதெல்லாம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான நிலையையே எடுத்து வந்துள்ளது. 

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான மன்மோகன் வைத்யா என்பவர் இடஒதுக்கீடு வேறு சூழலில் அறிமுகப்படுத்தப் பட்டது. அதற்கு ஒரு கால வரம்பு வைத்து முடிவு கட்ட வேண்டுமென்று 2017ஆம் ஆண்டில் ஒரு விழாவில் பேசும் போது கூறியுள்ளார். அந்த அமைப்பைச் சேர்ந்த கோவிந்தாச்சாரியா என்ப வர் 2016 ஆம் ஆண்டில் ஒரு ஏட்டிற்கு அளித்த  பேட்டியில் இடஒதுக்கீட்டை நிராகரித்ததோடு புதிய அரசியலமைப்பு தேவை என்றார். 

2015ஆம் ஆண்டில் எம்.ஜி.வைத்யா என்ற ஆர்எஸ்எஸ்காரர் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறி யுள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 2015ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டு முறை மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கூறி யுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, விபிசிங் பிரதமராக இருந்தபோது பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்றிய அரசுப்பணியில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் குழு பரிந்துரையை நிறை வேற்ற முயன்ற போதுதான் எல்.கே.அத்வானி என்ற பாஜககாரர் தலைமையில் ரதயாத்திரை நடத்தப்பட்டது. அப்போது மண்டலா? கமண்ட லா? என்ற விவாதம் முன்னுக்கு வந்தது. விபிசிங் அரசை பாஜக கவிழ்த்ததற்கு காரணம் இடஒதுக் கீடு மீதான அவர்களது ஒவ்வாமைதான். 

மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களு க்கு 27 சதவீதம் வழங்க வேண்டும் என்பதை நீதி மன்றத்தில் எதிர்த்தது மோடி அரசு மறந்துவிட முடியாது. இப்போதும்கூட பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான இடங்களை வஞ்சகமாக மறுக்கும் ஆட்சிதான் இது. இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான அரசமைப்புச் சட்டத்தையே மாற்ற சதிசெய்யும் கூட்டம்தான் பாஜக. இவர்கள் திடீரென சமூகநீதி பேசுவது தேர்தல் கால மாரீச வேடமேயன்றி வேறல்ல.