கோடை காலத்தில் கோடிக்கணக் கான முறைசாரா தொழிலாளர் கள் குறிப்பாக கட்டுமான தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், செங்கல் சூளை, சாலையோர வியாபாரிகள், சுவிக்கி, சோமோட்டா ஊழியர்கள், ஒலா - உபர் ஓட்டு நர்கள் மற்றும் இதர சேவைத் துறையில் பணிபுரி யும் தொழிலாளர்கள் வெப்ப அழுத்தத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். வெப்ப அழுத்தம் என்பது வெப்பநிலையை மட்டுமல்ல, ஈரப்பதம் மற்றும் சூரிய கதிர்வீச்சை யும் சார்ந்துள்ளது. இது காயங்கள் மற்றும் வெப்பம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதன் மூலம் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது.
அதிகரிக்கும் வெப்ப அழுத்தம்
1995 இல் வெப்ப அழுத்தத்தின் காரணமாக உலக அளவில் 1.4சதவீதம் வேலை நேரம் இழந்ததால் 2.5 கோடி வேலை இழப்பு ஏற்பட்டது. 2030 இல் 1.3 டிகிரி வெப்பம் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வேலை நேர இழப்பு என்பது 2.2 சதவீதமாகவும் மற்றும் உற்பத்தி இழப்பு காரணமாக 5 கோடி வேலைகள் இழக்கும் அபாயம் ஏற்படும். ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4சதமாக குறையும் நிலை ஏற்படும். 2030 இல் உற்பத்தி இழப்பு 5.3 சதவீதமாக இருக்கும். இதனால் ஏறத்தாழ பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். 1995 இல் வெப்ப அழுத்தத்தின் காரணமாக உலக அளவில் 1.4சதவீதம் வேலை நேரம் இழந்ததால் 2.5 கோடி வேலை இழப்பு ஏற்பட்டது. 2030 இல் 1.3 டிகிரி வெப்பம் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வேலை நேர இழப்பு என்பது 2.2 சதவீதமாகவும் மற்றும் உற்பத்தி இழப்பு காரணமாக 5 கோடி வேலைகள் இழக்கும் அபாயம் ஏற்படும். ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4சதமாக குறையும் நிலை ஏற்படும். 2030 இல் உற்பத்தி இழப்பு 5.3 சதவீதமாக இருக்கும். இதனால் ஏறத்தாழ பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்.
இந்தியாவில் பாதிப்பு
வெப்ப அலை மற்றும் அழுத்தத்தின் காரணமாக தெற்காசியாவில் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் உண்மையில் 4 சதவீதத்திற்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளன.வெப்ப அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடு இந்தியா ஆகும். இது 1995 இல் 4.3 சதவீத வேலை நேரத்தை இழந்தது. 2030இல் 5.8 சதவீத வேலை நேரத்தை இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக மக்கள் தொகை காரணமாக, இந்தியா பெரும்பான்மை யான வேலைகளை இழக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான பாதிப்புகள் விவசாயத் துறையில் உணரப்பட்டா லும், கட்டுமானத் துறையில் அதிக வேலை நேரம் இழக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இந்தியாவில் கிராமப்புறங்களிலிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் தொழில் செங்கல் மற்றும் கட்டுமானத் தொழிலாகும். இந்த துறையில் குழந்தைகள், சிறார்கள் மற்றும் பெண் தொழிலாளர்கள் அதிகமாக பணி புரிகின்றனர். இவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. அதிக வெப்பநிலை மற்றும் கதிரியக்க வெப்ப அளவுகள் காரணமாக அவர்களின் உடல் நிலை பாதிக்கப்படுவதோடு வாழும் வயதும் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் செங்கல் தயாரிப்பு, கட்டு மானம் போன்ற அமைப்புசாரா தொழில் களுக்குப் பொருத்தமான இரண்டு சட்டங்கள் உள்ளன, அவை: தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் கட்டிடம் மற்றும் பிற கட்டு மானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை விதிமுறைகள்) சட்டம் 1996. இந்தச் சட்டங்கள்முழுமையாக அமலாக்கப்படு வதில்லை இந்த சட்டங்களில் வெப்ப அலை, அதன் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எந்த வித நிவாரணமும் இல்லை.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) பரிந்துரைகள்
னால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க சர்வ தேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) பல்வேறு அறிவுரைகள் மற்றும் தீர்மானங்களை இயற்றி உள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு அதன் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகா தார மாநாட்டில் தனது பரிந்துரை எண் 155 மூலம், வெப்ப அழுத்தமானது தொழிலாளர் களின் வேலை சார்ந்த பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு (Occupational Safety &Health)அபாயகரமானது என்று தீர்மானித் துள்ளது. இதனை முழுமையாக தொழிலாளர் அமைப்புகள், முதலாளிகள் மற்றும் அரசாங் கங்கள் கவனத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடு களை அமலாக்கிட வேண்டும் என்கிறது. மேலும் பரிந்துரை, (எண். 164)குறிப்பிட்டது போன்று தரநிலைகளுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட முதலாளிகள் மற்றும் தொழிலாளர் அமைப்பு களுடன் கலந்தாலோசித்தும், மற்ற அபாயங் கள், வெப்ப அழுத்தத்தை நிவர்த்தி செய்யும் தேசிய வேலை சார்ந்த பாதுகாப்பு மற்றும் ஆரோ க்கியம்கொள்கையை உருவாக்க வேண்டும். உதாரணமாக, தொழிலாளர்களை பாது காத்திட குளிர் கூரைகள் மற்றும் குளிர் நடை பாதைகளை நிறுவுதல் ஆகியவை அடங்கும். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குளிர்ந்த கூரைகள் கொண்ட வீடுகள், பீனிக்ஸ், அரிசோனாவில் உள்ள முனிசிபல் அதிகாரிகள், “கூல் ரூஃப்ஸ் மாஸ்டர் பிளான்” மற்றும் “மரம் மற்றும் நிழல் மாஸ்டர் பிளான்” ஆகியவற்றைத் தொடங்கிஅமலாக்க முற்பட்டுள்ளனர். இது நகரின் வெப்ப விளைவுகளைத் தணிக்க குளிர் கூரைகளை நிறுவுதல் மற்றும் மரங்களை நடுதல் ஆகியவற்றை பரிந்துரைக்கிறது. மூச்சுக்கு முன்னூறு முறை அமெரிக்கா என்று கூவும் மோடி, அவர்கள் அமைத்திருக்கக்கூடிய பாதுகாப்பு வசதிகளை, இந்தியாவில் செல் வத்தை உருவாக்கும் தொழிலாளர்களுக்கு ஏன் செய்ய மறுக்கிறார்?
“வேலையின் போது ஏற்படும் விபத்துக்கள் மற்றும் உடல்நலத்திற்கு ஏற்படும் காயங் களைத் தடுப்பதற்கு” தேசிய வேலை சார்ந்த பாது காப்பு மற்றும் ஆரோக்கியம் (OSH) கொள்கை யை ஏற்றுக்கொள்வதை ஐஎல்ஓ ஒரு கடமை யாக ஆக்குகிறது. பரிந்துரை எண் 164, தேசிய வேலை சார் பாதுகாப்புக் கொள்கையில் “வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் பணியிடத்தில் காற்றின் இயக்கம்” ஆகியவற்றைக் கையாளும் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது. மற்ற சர்வதேச தொழிலாளர் தரநிலைகளும் வெப்ப அழுத்த அபாயங்களை நிர்வகிப்பதற்கான கருவிகளை வழங்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். “சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் ஆரோக்கியத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்குவதற்கு”, குறிப்பாக “வெப்பநிலையில் திடீர் மாறுபாடுகள்” மற்றும் “அதிகமான வெப்பம்” ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலம் முதலாளிகள் “அனைத்து பொருத்தமான நடவடிக்கைகளையும்” எடுக்க வேண்டும் என்று பரிந்துரை எண். 97, குறிப்பிடுகிறது. சுகாதாரம் (வணிகம் மற்றும் அலுவல கங்கள்) பரிந்துரை, 1964 (எண். 120), என்பது வெப்ப அழுத்த சூழ்நிலைகளுக்குத் தனிப்பய னாக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் தடுப்பு நட வடிக்கைகளை அமைக்கும் ஒரு பொதுவான கொள்கையாக, பரிந்துரை எண். 120 இன் 20வது பத்திதெரிவிக்கிறது. பயனுள்ள வேலைசார் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவுவதற்கு அரசாங்கங்கள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இடையே கூட்டு முயற்சி மற்றும் ஒத்துழைப்பு தேவை என்பதையும் குறிப்பிடுகிறது. வெப்பம் தணிக்கும் பாதைகள் மற்றும் தொழில் சார்ந்த வெப்ப அழுத்தங்கள் - காலநிலை மாற்றம் தணிப்பு என்பது தொழில் சார்ந்த வெப்ப அழுத்தத்தைத் தடுப்பதற்கும் எதிர்கால தொழிலாளர் படையை வெப்பம் தொடர்பான அபாயங்களிலிருந்து பாதுகாப்பதற்கும் முக்கியமாகும்.
கால நிலை மாற்றம் : சர்வதேச தீர்மானத்தை அமலாக்காத முதலாளித்துவம்
வெப்பத் தணிப்புநடவடிக்கை என்பது உலக நாடுகள் கலந்து கொண்ட கியோட்டோ மாநாட்டிலிருந்து 2024ல் நடைபெற்ற துபாய் மாநாடு வரை புவி வெப்பமயமாதலைத் தவிர்க்க அல்லது குறைக்க மனித குலத்தை பாதுகாத்திட ஏராளமான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக கார்பன் வாயுவை அகற்றிட (டிகார்பனைசேஷன்), போக்குவரத்தை மின்மயமாக்குதல், நிலையான விவசாயத்தை மேம்படுத்துதல், காடழிப்பு மற்றும் காடு வளர்ப்பு மற்றும் கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு வெளியேற்றத்தை தடுக்கும் தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்து வெப்பத்தை தணிக்கும் நடவடிக்கை களில் இறங்க வேண்டும். பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு மற்றும் திரட்சியைக் குறைப்பதன் மூலம், காலநிலை மாற்றத்தை இலகுவாக்க இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் நிறைவேற்றவில்லை. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் ஏற்றுக் கொண்ட இலக்கை நிறைவேற்றி வருகின்றன. அதே நேரத்தில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு என்பதை பற்றி இந்திய அரசு கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. இந்தியாவில் ஏற்கனவே இருந்த வேலை பாதுகாப்பு மற்றும் உடல் நலன் சட்டங்களை தொழிலாளர்களுக்கு விரோதமாக திருத்தி தொகுப்பாக மாற்றப்பட்டது. திருத்தப்பட்ட சட்டத் தொகுப்பிலும் கூட இந்த வெப்ப அலைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை.
- வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட தொழில்கள் என்ன என்பதை வரையறுக்க வேண்டும்; குறிப்பாக சேவை துறைகள்.
- அரசாங்கங்கள் அதிகபட்ச வெப்பநிலையை நிர்ணயிக்கும் விதிமுறைகளை கடைப் பிடிக்க வேண்டும்.
- அதிக வெப்பநிலையிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க குறிப்பிட்ட நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.
- பாதுகாப்பான இடம்பெயர்வை உறுதிசெய்ய ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
- வெப்ப அழுத்தத்தின் விளைவுகளுக்கு ஏற்ப சமூக காப்பீடு மற்றும் சமூக உதவிவழங்குதல்.
- பணியிடங்களில் தொழிலாளர்கள் ஓய்வு எடுக்க சமூக கூடங்கள் மற்றும் பழங்கள் மற்றும் பானங்கள் வழங்க வேண்டும்; நாடு முழுவதும்,தொழில்துறை பங்குதாரர் களான தொழிலாளர்கள், முதலாளிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு நிறுவனங்களை கொண்டு சமூக உரையாடல், கொள்கை உரு வாக்கம் மற்றும் கொள்கை அமலாக்கத்திற் கான வழிவகைகளை செய்ய உறுதி செய்ய வேண்டும். இதற்கான இயக்கங்களை அனைவரும் முன்னெடுக்க வேண்டும்.