districts

தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் சேலம் தீவட்டிபட்டி சாதியவாதிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்திடுக!

சேலம், மே 3 - சேலம் தீவட்டிபட்டி கிராமத்தில் தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சாதியவாதிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே  போடப்பட்டுள்ள பொய் வழக்கை காவல்துறை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அர சுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி யுள்ளது. இதுதொடர்பாக, தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக் கண்ணு, பொதுச்செயலாளர் கே. சாமுவேல் ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கொலைவெறித் தாக்குதல் - தீவைப்பு சேலம் மாவட்டம், தீவட்டிபட்டி கிராமத்தில் இந்து அறநிலையதுறையின் கீழ் செயல்பட்டு வரும் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா வில் பட்டியல் சமூக மக்கள் பங்கெடுப்பது வழக்கம். ஆனால், மே 3 அன்று நடைபெற்ற கோவில் தேரோட்டத்தில் பட்டியல் சமூக மக்கள் பங்கேற்கக் கூடாது என்று சாதியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையொட்டி நடைபெற்ற சமாதான கூட்டத்தில் ஆதிக்க சாதியினர் காவல்துறை முன்னிலையிலேயே பட்டியல் சமூக மக்கள் மீது  கொலை வெறித் தாக்குதல் நடத்தியதோடு, அங்குள்ள கடைகளுக்கும் தீ வைத்துள்ளனர்.  தலித் மக்களையே  கைது செய்த காவல்துறை இதனை எல்லாம் தடுக்க முடியாத காவல் துறை, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நட வடிக்கை எடுப்பதற்கு மாறாக தலித் குடியிருப்பு க்குள் புகுந்து தலித் மக்களைக் கைது செய்து ள்ளது. அவர்கள் மீது பொய் வழக்கும் பதிவு  செய்துள்ளனர். இதில், தமிழக அரசு உடனடியாக  தலையிட்டு பட்டியல் சமூக மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெறுவதோடு, கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தி கடைகளுக்கு தீவைத்து வன்முறையில் ஈடுபட்ட சாதியவாதிகள் மீது உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய சட்டப் பூர்வமான பாதுகாப்பையும், நிவாரணங்களை யும் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.