tamilnadu

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி செய்திகள்

ஆய்வுக்குப் பின் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்படும் அமைச்சர் தகவல்
தூத்துக்குடி, ஜூலை 14- திருச்செந்தூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆய்வுக் குப் பிறகு, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் தொடங் கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கூறினார். இதுகுறித்து திருச்செந்தூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் திருச்செந்தூர் மற்றும் சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தி ருந்தார்.  அதன் அடிப்படையில், தற்போது சென்னை நெமிலி யில் இத்திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். அதேபோல, திருச்செந்தூர் அருகே ஆலந்தலையிலும் ஆய்வு செய்யப்பட்டு, மத்திய அரசின் அனு மதி கிடைத்தவுடன் திட்டம் செயல்படுத்தப்படும். தூத்துக்குடி யின் தொழில் தேவையை பூர்த்தி செய்யவே முள்ளக்காடு பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.634 கோடியில் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

வள்ளியூர் அருகே ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி வீட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை
திருநெல்வேலி, ஜூலை 14- வள்ளியூர் அருகே ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி வீட்டை உடைத்து 100 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வடக்கன் குளம், சங்குபுரத்தை சேர்ந்தவர் பாலன் (வயது65). இவர் பி.எஸ்.என்.எல்.லில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். கடந்த மாதம் இவரது மகனுக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மணப் பெண்ணுக்கு அணிவித்த நகை களை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து விட்டு குடும்பத்து டன் அனைவரும் வெளியூருக்கு விருந்துக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அங்கு வந்த கொள்ளை யர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த னர். வீட்டில் இருந்த பீரோவையும் உடைத்து அதில் இருந்த 100 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு ஓடி விட்டனர். ஞாயிறன்று காலை வீட்டுக்கு வந்த பாலன், பின்பக்க கதவு உடைந்து பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சிய டைந்தார். இதன் மதிப்பு ரூ.20 லட்சத்திற்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாலன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வள்ளியூர் டி.எஸ்.பி. மற்றும் பணகுடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப் பட்டது. போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசா ரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.