tamilnadu

தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி முக்கிய செய்திகள்

இராணுவக் கல்லூரி தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி, ஆக.25-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி, டேராடூன் - 2020 சேர்க்கை தகுதித் தேர்வுக்கு 02-07-2007க்கு பின்னதாகவும், 01-01-2009-க்கு முன்னதாகவும் பிறந்த 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது பயிலும் சிறார்கள் விண்ணப்பிக்கலாம். தகுதித் தேர்வு 2019 டிசம்பர் 1,2 தேதி களில் நடைபெறுகிறது. விண்ணப்பத்தினை The Commandante RIMC- Dehradun-248 003, Uttarakhand State என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் (இரட்டை பிரதி) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 30.09.2019 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கப் பெற வேண்டும்.  மேலும் தகவல்களுக்கு www.rimc.org என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நலன் தூத்துக்குடியை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரி வித்துள்ளார்.

முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி, ஆக.25-அனைத்து முன்னாள் படைவீரர்களின் சிறார்களும் பயனடையும் பொருட்டு 2018–2019-ம் கல்வியாண்டு முதல் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. இக்கல்வி யாண்டு முதல் (2019-2020) இணையதளம் மூலம் முதல் தடவையாக விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால வரம்பு நீக்கப்பட்டு ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சலுகை இளநிலை படைஅலுவலர் பதவி மற்றும் Toby Commisissined Officer பதவியில் உள்ளோருக்கும் வழங்கப்படும். edu.exweletutor.com-eduscholarship என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தின் அனைத்து வட்டாட்சியர் இ-சேவை மையத்தின் (CSC) மூலம் கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம். கல்வி உதவி தொகை பெறுவதற்கு முன்னாள் படை வீரர்களின் மகன்களுக்கு 25 வயதிற்கு மிகாமலும், மகள் களுக்கு திருமணம் ஆகும் வரையிலும் விண்ணப்பிக்க லாம். கைம்பெண் மற்றும் முன்னாள் படைவீரரின் மனை விக்கு வயது வரம்பு கிடையாது.  எனவே அனைத்து முன்னாள் படைவீரர்களும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறு மாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்.

நெல்லை தாமிரபரணி பொறியியல் கல்லூரியின் 4ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா 
திருநெல்வேலி, ஆக.25-நெல்லை தாமிரபரணி பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். இதில் தலைமை விருந்தினராக கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் இளங்கோ கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார் .கல்லூரியின் முதல்வர் முனைவர் அசன் முகையதீன் வரவேற்புரை ஆற்றினார்.  நிகழ்ச்சியில் கல்லூரி துணை தலைவர் பெருமாள், பொருளாளர் முருகேச பாண்டியன், செயலாளர் செந்தில்குமார் பால்ராஜ், அறங்காவலர்கள் பழனீஸ்வரி, சிவக்குமார் ,பவானி சிவக்குமார், கல்லூரி இயக்குனர் முனைவர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் துணைவேந்தர் 115 மாணவ மாணவியர்களுக்கு பட்டம் வழங்கினார். இவ்விழாவில் ஒவ்வொருதுறையிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளை ஆங்கில துறை பேராசிரியர் முனைவர் ராஜகுமாரி, கணிப்பொறி துறை உதவிப் பேராசிரியர்கள் டேவிட், பொன் செல்வி, கல்லூரி யின் நிர்வாக அதிகாரி மாரியப்பன் நடராஜ் மற்றும் அனைத்து பேராசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

உப்பாறு நீர்த் தேக்கத்திற்கு காவிரி நீர் 30 கிராம விவசாயிகள் கோரிக்கை 
மண்ணச்சநல்லூர், ஆக.25-திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகில் உள்ள தெற்கு சிறுப்பத்தூர் உப்பாறு நீர்த் தேக்கத்திற்கு காவிரி யிலிருந்து உபரி நீரை கொண்டு வர மாவட்ட ஆட்சியரி டம் மனு கொடுப்பது என 30 கிராம விவசாயிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது காவிரியில் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. அவற்றை தடுத்து வறட்சி பகுதி கிராமங்களுக்கு கொண்டு வருவது தொடர்பான இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் சா.அய்யம்பாளையத்தில் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் வருகை தந்த விவசாயி கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வ லர்கள் ஆலோசனை வழங்கினர்.  1980-ஆம் ஆண்டு உப்பாறு நீர்த் தேக்கம் அமைக்கப் பட்டது. 1995 மற்றும் 2006-ஆம் ஆண்டுகளில் நீர்த் தேக்கத் தில் நீர் நிரம்பி வழிந்தது. அதற்கு பிறகு சரியான மழை இல்லாததால் நீர்த் தேக்கம் வறண்டு போய் விட்டது. அந்த காலத்தில் தொடர்ந்து பருவ மழை பெய்ததால் கிணறுகளில் போதுமான நீர் கிடைத்தது.  ஆனால் பருவ மழை தொடர்ந்து பொய்த்து வருவதால் நீர் மட்ட அளவு உயர்ந்து கொண்டே போகிறது. ஆயிரம் அடிக்கு போர் போட்டாலும் தண்ணீர் வருவதில்லை. கிராம பகுதிகளில் நிறைய குளம், ஏரிகள் உள்ளன. மழைக் காலங்களில் காவிரியில் வெள்ளப்பெருக்கு நீர் நேரடியாக கடலுக்கு செல்கிறது. எனவே வீணாக கட லுக்கு செல்லும் உபரி நீரை காவிரியிலிருந்து வாய்க்கால் மூலம் திருத்தலையூர், புலிவலம், ஓமாந்தூர், தெற்கு சிறுப்பத்தூர் ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படுத்தினால் விவசாய கிணறுகளின் நீர் மட்டம் உயரும். கால்நடைகள் வளர்ப்பதற்கும், குடிநீருக்கும் பிரச்சினை வராது. எனவே இதற்கான ஏற்பாடுகளை சா.அய்யம்பாளை யம், தெற்கு சிறுப்பத்தூர், வீராணி, ஓமாந்தூர், பெர மங்கலம், கொணலை, இருங்களுர், கரியமாணிக்கம் உள்பட 30 கிராம விவசாயிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதி நிதிகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் ஒருங்கி ணைந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பது. ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டு இயக்க கிளைகளை துவங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. நிறைவாக கந்தசாமி நன்றி கூறினார்.