தூத்துக்குடி, ஆக.20- இந்த ஆண்டாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எம்.பி., கனிமொழி வலியு றுத்தி உள்ளார். கடந்த மே மாதம் நீட் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலை யில் கொரோனா தொற்றின் கட்டுப்பாட்டு நடவடிக்கையாகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து, இத்தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலை யில், நீட் தேர்வுக்கு விலக்கில்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது. நீட் தேர்வால் பல ஏழை மாண வர்களின் கனவுகள் கலைந்து போகும் எனக் கூறி தற்கொலை செய்து கொண்ட அனிதாவைப் போல, தற்போது கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருடங்களாக நீட் தேர்விற்கு தன்னை தயார்ப்படுத்தி வந்த சுபஸ்ரீ, இந்த ஆண்டு தேர்வில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்பார்கள்? தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா உள்ளிட்டு மனக் குழப்பத்திலேயே இருந்துள் ளார். இதன் காரணமாக ஏற்பட்ட பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்ட விசயம் காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மருத்துவத் துறையில் பொது நுழைவுத் தேர்வாக நீட் கட்டாயம் வேண்டும் என ஒரு தரப்பு வலியுறுத்தி வந்தாலும், ஏழை, எளிய மாணவர்களுக்கு இது ஒரு எட்டாக் கனியாகவே உள்ளது. இன்னும் பல உயிர்க ளைப் பலி வாங்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கோரிக் கையாக உள்ளது. இந்த ஆண்டா வது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எம்.பி., கனி மொழி வலியுறுத்தி உள்ளார்.