tamilnadu

img

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட கூட்டம்

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட கூட்டம் செப். 25 அன்று திருவள்ளூரில்  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பெ.ரூபன் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன், மாநில இணைச் செயலாளர் கி.மணிவாசகம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.மாவட்ட முன்னாள் கவுன்சிலர் பி.பாசூரான்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றி வரும் செய்தியாளர்கள், நிழற்படம் எடுப்பவர்கள், ஒளிப்பதிவாளர்கள் அனைவருக்கும் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். மேலும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;