tamilnadu

வாலிபர் சங்க போராட்டம், மக்கள் எதிர்ப்பின் எதிரொலி பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு குமரி மாவட்டத்தில் தடை

நாகர்கோவில், ஜூலை 5- தூத்துக்குடி மாவட்டம் சாத் தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினால் அடித்து சித்ரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிசிஜடி காவல் துறையினர் கொலைவழக்கு பதிவு செய்து 5 காவல் துறை யினரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் சாத்தன் குளம் காவல்நிலையத்தில் பணி புரியும் பிரண்ட்ஸ் ஆப் போலீசார் 4 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப் படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்நிலையங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திலும் பிரண்ட்ஸ் ஆப் போலீசார் செயல் பட தடைவித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஶ்ரீநாத் உத்தரவிட்டு உள்ளார்.

குமரி மாவட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட காவல்நிலையங்கள் உள்ளன. இந்த காவல்நிலையங்களில் அனைத்து மகளிர் காவல்நிலை யங்கள் தவிர மற்ற காவல்நிலை யங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பயன்படுத்தப்பட்டு வந்தனர்.  ஒருநாளைக்கு சராசரியாக பிரண்ட்ஸ் ஆப் போலீசை சேர்ந்த 60 பேர் வரை குமரி மாவட்ட காவல்நிலையங்களில் பணிக்கு வருவார்கள். தற்போது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவை தொடர்ந்து இவர்க ளுக்கு தடை விதிக்கப்பட்டுள் ளது. அந்தந்த சப் டிவிஷன் களுக்கு இது தொடர்பான உத்த ரவை காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாத் பிறப்பித்துள்ளார். அனை த்து காவல்நிலையங்களிலும் இதை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தி உள்ளார். காவல் துறையில் பிரெ ண்ட்ஸ் ஆப் போலீஸ் முறையை ஒழிக்க வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் தமிழகம் தழுவிய அள வில் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக் கது.