விளாத்திகுளம்புதூர் பள்ளி ஆசிரியர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளம் புதூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வடிவேல் முருகனை இன்று அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தி படுகொலை செய்தார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக ஆசிரியர் வடிவேல் முருகனை கொலை செய்த அற்புத செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட ஆசிரியர் வடிவேல் முருகன் வட்டார வளர்ச்சி மைய சிறப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார்.