தூத்துக்குடி, ஜூலை 9- தமிழக அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச சம்பள சட்டத்தின்படி ரு. 466 ஐ உடனே வழங்க பேச்சு வார்த்தை மூலம் நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி முள்ளக் காடு, ராஜீவ் நகர மஞ்சள் நீர் காயல் ஆகிய பகுதியில் உப்பள தொழிலா ளர்கள் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சங்க மாவட்ட செயலாளர் கே சங்கரன்பொருளா ளர் மணவாளன், செயல் தலைவர் எம். ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி புறநகர செயலாளர் பி.ராஜா, சங்க நிர்வாகிகள் சுப்பை யா, ஜெயாசெல்வி முருகன், முனிய சாமி மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இது சம்பந்தமான கோரிக்கை மனு கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.