tamilnadu

பெற்றோரின் சண்டையால் வீட்டை விட்டு வெளியேறிய  3 குழந்தைகள் மீட்பு

தூத்துக்குடி, ஆக.1- தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே நாணல்காட்டான் குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சத்யா ஆகியோரின் பேத்தி சத்யஜோதி (12), பேரன்கள் ஹரி சிவகணேஷ் (11) மற்றும் ஸ்ரீதர் (10) ஆகிய மூன்று குழந்தைகளும் வெள்ளியன்று மதியம் 2 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் மாலை 5 மணி ஆகியும் வீடு திரும்ப வில்லை, இதனால் அவரது தாத்தா மற்றும் பாட்டி மாலை 6 மணிக்கு முறப்பநாடு காவல நிலைய ஆய்வாளர் பார்த்திபனிடம் புகார் அளித்தனர். உடனடியாக காவல்துறை விசார ணையில், குழந்தைகள் வட வல்லநாடு காட்டுப்பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று குழந்தைகளை மீட்டனர். குழந்தை களை விசாரித்ததில், தங்களது தாய், தந்தையர் குடும்பச் சண்டை காரணமாக இருவரும் வீட்டை விட்டுச் சென்று விட்ட தாகவும், தாங்கள் தங்கள் தாத்தா, பாட்டியுடன் வசித்து வருவதாகவும், பெற்றோர்கள் இல்லாத மன வருத் தத்தில் வீட்டிலிருந்து வெளியேறி எங்கா வது செல்வது என்று முடிவெடுத்து சென்றதாகவும் தெரிவித்தனர். இத னையடுத்து அந்த குழந்தைகள் தாத்தா, பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டனர். புகார் வந்த ஒரு மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தைகளை மீட்ட முறப்பநாடு காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.