tamilnadu

img

சாலைகளை சரி செய்யக் கோரி வாழைக்கன்று நடும் போராட்டம்

தூத்துக்குடி,அக். 23-  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் உள்ள அனைத்து ரோடுகளும் குண்டும் குழியுமாக மக்கள் நடமாட முடியாத நிலையில் உள்ளது. இதனை சரி செய்யக்கோரி திருச்செந்தூர் தேரடி அருகில் புதனன்று சிபிஎம் சார்பில் வாழைக் கன்று நடும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு திருச்செந்தூர் ஒன்றிய செய லாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டி யன், சந்திர சேகர்,பொன் கல்யாண சுந்தரம்,எஸ்.சிவதானு தாஸ்,அன்பழகன், முருகேஷ், முருகேசன் ஜெபஸ்டின் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;