கிருஷ்ணகிரி, நவ. 30- ஓசூர் பழைய மத்திகிரி யில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் உள்ள சாலை இரண்டு நாட்களுக்கு முன்புதான் தார் சாலையாக போடப்பட்டது. இந்நிலை யில் தனியார் ஒருவர் அந்த இடம் தனக்கு சொந்தமானது எனக் கூறி அடுத்த நாளே சாலையை இயந்திரம் மூலம் பறித்து சேதப்படுத்தினார். இதையடுத்து வாலிபர் சங்க கிளைச் செயலாளர் ரவி தலைமையில் அந்த பகுதி மக்கள் அதை தடுத்து நிறுத்தி இயந்திரத்தை காவல் துறையில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சாலையை மீண்டும் அமைக்க வேண்டும் என கேட்டபோது காவல்துறையி னர் கண்டு கொள்ளாமல் இருந்தனர். இதுகுறித்து மீண்டும் காவல் துறையின ரிடம் பேச்சுவார்த்தை நடத்தி யதில் தீர்வு எட்டப்பட வில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் பிஜி.மூர்த்தி தலை மையில் தேன்கனிக் கோட்டை சாலையில் மறி யலில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறை அதிகாரி கள், மாநகராட்சி பொறியா ளர், வட்டாட்சியர் ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். பேச்சுவார்த்தை யில் மீண்டும் உடனடியாக சாலையை போட நடவ டிக்கை எடுப்பதாக அதிகாரி கள் உறுதி அளித்ததின் பேரில் மறியல் கைவிடப் பட்டது. இதில் மாவட்ட செயலா ளர் எஸ்.ஆர்.ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்டக் குழு உறுப்பினர் ரவி, வட்டக் குழு உறுப்பி னர் ஜெயராமன், ஆட்டோ சங்கத் தலைவர் வாசு தேவன், வாலிபர் சங்க வட்டச் செயலாளர் நாகேஷ் பாபு, மத்திகிரி கிளைச் செயலாளர் ரவி, தலைவர் மல்லேஷ், மிடுகரப்பள்ளி கிளைச் செயலாளர் நாராய ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.