tamilnadu

திருமணமான 21 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை

தூத்துக்குடி, மே 25-தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்முத்து மகன் சுப்பையா.(34) தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த புவனேஸ்வரி (23) என்ற பெண்ணுக்கும் கடந்த கடந்த2ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், சுப்பையா வியாழனன்று தனது மாமனார் வீட்டிற்கு சென்றாராம் .அங்கு மதியம் வீட்டின் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து தகவல் அறிந்து சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார். மேலும், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 21 நாட்களில் பதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.