சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்து சென்றதில் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்த சிபிஐ குற்றப்பத்திரிகையில் 9 காவலர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.
ஜெயராஜ், 59, மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், 31, ஆகியோர் அவர்களது
மொபைல் போன் கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாக 15 நிமிடங்கள் இரண்டு வைத்திருந்ததாக ஜூன் 19 அன்று கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியில் காவல்துறை காவலில் வைக்கப்பட்டு இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் 9 காவலர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் மிருகத்தனமாக நடந்து கொண்டதாக கண்டனங்கள் வலுத்தது. இந்த வழக்கில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் இறப்பதற்கு முன்பு ஜூன் 19 இரவு சாத்தான் குளம் காவல்துறை சித்தரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. மொபைல் போன் கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாக 15 நிமிடங்கள் அதிகமாக திறந்திருந்ததாக ஜூன் 19 கைது செய்யப்பட்டனர். இதனால் இருவரும் சண்டையிட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். காவல்துறை அலுவலகத்தில் இருவரையும், கொடூரமாக சித்திரவதைக்கு உட்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. அவர்களது உடல் பகுதிகளில் உள் மற்றும் வெளிப்புற காயங்கள் இருப்பதாக அவர்களது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. இதனால் புலனாய்வு பிரிவிடம் இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் காவல்துறையினருக்கு அதிமுக ஆதரவாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
ஏற்கனவே, ஸ்டெர்லைட் வழக்கில் 13 பேர் துப்பாக்கியால் சுட்டதில் மரணமடைந்தனர். இந்த வழக்கில் காவல்துறையினரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.