தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகேயுள்ள மேல அரசரடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ். இவரதுமனைவி பூரணம். இந்த தம்பதி யருக்கு அருண் சுரேஷ் (12), அருண்வெங்கடேஷ் (12) என இரட்டை ஆண்குழந்தைகள் இருந்தனர். சம்பவத் தன்று மதியம் இந்த சிறுவர்கள் இருவரும் விளையாடச் சென்றனர். பின்னர்வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மாயமான சிறுவர்கள் இருவரும்அங்குள்ள ஊரணியில் சடலமாக மிதந்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு விசாரித்தனர். ஊரணியில் விளையாடிய போது ஆழமான பகுதிக்குச்சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந் திருக்கலாம் என கூறப்படுகிறது.