tamilnadu

கணவன் - மனைவி பலி

‍  தூத்துக்குடி, ஜூலை 30- தூத்துக்குடி அருகே மோட்டார் சைக் கிள் மீது லாரி மோதியதில் கணவன் - மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.  தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகேயுள்ள பொம்மையாபுரத்தைச் சோ்ந்தவா் அந்தோணிசாமி (40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட் சுமி (37). அந்தோணிச்சாமி, தனது மனை வியுடன் மோட்டார் சைக்கிளில் எட்டய புரம் அருகேயுள்ள இளம்புவனம் கிரா மத்தில் நாட்டு மருந்து வாங்குவதற்கு சென்றாராம். மருந்து வாங்கிக் கொண்டு இருவரும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா். தூத்துக்குடி - மதுரை பைாஸ் ரோட்டில் எட்டயபுரம் பல்க் அருகே வந்த போது, திண்டுக்கல்லில் இருந்து தூத் துக்குடி நோக்கி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெய லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். படுகாயம் அடைந்த அந்தோணி சாமி, தூத்துக்குடி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புதன் இரவு இறந்தார். இது குறித்து எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்  டர் கலா வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் வீரமணி என்பவரை கைது செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.