தூத்துக்குடி புறநகர் முள்ளக்காடு அரசு மருத்துவமனை முன்பு கொரோனாபரிசோதனையை வட்டார அளவில் அதிகப்படுத்த கோரியும் பரிசோதனை முடிவுகளை விரைவில் அறிவிக்கக் கோரியும் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறநகர் தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூமயில் , நிர்வாகிகள் சுந்தரி செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.