tamilnadu

img

சாத்தான்குளம் காவல்துறையின் தொடரும் அத்துமீறல்: விசாரணைக்கு அழைத்து சென்ற நபரை காவலர் குடியிருப்பில் வைத்து கொடூர தாக்குதல்

தூத்துக்குடி, ஆக.31- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையை கண்டித்து பசும்பொன் முத்துராம லிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இயக்க நிறுவன தலைவர் இசக்கிராஜா தலைமை தாங்கினார். காவல் துறை யால் தாக்கப்பட்ட சாத்தான்குளம் மார்டின் மனைவி மற்றும் குடும்பத் தார் கலந்து கொண்டனர். இதுகுறித்து இவ்வியக்க நிறுவன தலைவர் செய்தியாளர்களிடம் தெரி விக்கும் போது, சாத்தான்குளம் தைக்காதெருவில் வசித்து வரும் செல்லப்பா மகன் மார்டினை கடந்த 23.08.2020 அன்று இரவு 8 மணியள வில், சாத்தான்குளம் காவல் ஆய்வா ளர் ஜார்ஜ் பெர்னான்டஸ் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜா, எஸ்.பி.சி. ஐ.டி சபாபதி, ஆய்வாளர் சின்னதுரை ஆகியோர் கொண்ட குழு கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தாமல், சட்டத்திற்கு முரணாக காவலர் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.  போலீஸ் தாக்குதலில் இறந்து போனால், சாத்தான்குளம் பெனிக்ஸ் ஜெயராஜ் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட நிலையே மார்டின் குடும்பத்தாருக் கும் ஏற்பட்டிருக்கும். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, நீதிபதியே போலீசாரை கண்டித்துள்ளார். காவல் துறைக்கு தொடர்ந்து, காவல்துறை யின் பெயரையே களங்கப்படுத்தி வரும், சாத்தான்குளம் காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக துறை  ரீதியாக நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.