tamilnadu

img

காவல்துறையைக் கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

வேடசந்தூர், ஜூலை 1-   தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் காவல்துறையின் சித்தரவதை யால் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்த சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குச் சென்ற கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதி தாசனை மிரட்டும் தொனியில் நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகளைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நீதி மன்றம் முன்பு வழக்கறிஞர் சங்கத் தலை வர் முருகேசன், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் நாகராஜன் உள்ளிட்ட ஏராள மான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழக அரசுக்கு எதிராகவும், காவல் துறைக்கு எதிராகவும் வழக்கறிஞர்கள் முழக் கங்களை எழுப்பினர். சாத்தான்குளம் சம்பவத்தைக் கண்டித்து திருவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கதிரேசன், செயலாளர் திருமலை யப்பன் ஆகியோர் தலைமையில் ஸ்ரீவில்லி புத்தூர் - சிவகாசி சாலையில் கண்டன பதாகை களை ஏந்தி வழக்கறிஞர்கள் மறியலில் ஈடு பட்டனர்.
விவசாயிகள் சங்கம்
சாத்தான்குளம் படுகொலையை கண் டித்து வேடசந்தூர் தாலுகா எரியோட்டில் விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பெரு மாள் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்க மாவட்டச் செயலாளர் அருள்செல் வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்து சாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் முத்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் முனியப்பன், சிக்கன் சவுடமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.