tamilnadu

லாரி டிரைவரிடம் செயின், பணம் திருட்டு

தூத்துக்குடி, ஜூன் 1- தூத்துக்குடி அருகே லாரி டிரைவரி டம் இரண்டரை பவுன் செயின், ரூ.16 ஆயி ரம் பணம் திருடு போனது தொடர்பாக போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை விக்டோரியா தெருவைச் சேர்ந்தவர் அமல தாஸ் மகன் புஷ்பராஜ் (41), லாரி டிரைவர். இவர் ஞாயிறு மாலை ஏரல் சேர்மன் கோவில் அருகேயுள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர் தான் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயின், ரூ.16ஆயிரம் பணம், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை தனது வேட்டியில் சுற்றி கரையில் வைத்துவிட்டு குளிக்கச் சென்றுள்ளார்.  குளித்துவிட்டு திரும்பி வந்து பார்த்த போது நகை, பணத்துடன் வேட்டி மாய மாகி இருந்தது. யாரோ மர்ம நபர்கள் அதனை திருடிச் சென்றது தெரியவந்ததது. இதுகுறித்து புஷ்பராஜ் ஏரல் காவல் நிலை யத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.