tamilnadu

கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை

தூத்துக்குடி, ஜூன் 18- தூத்துக்குடியில் கொரோனா தொற்றுள்ள 2 கர்ப்பிணி களுக்கு அறுவை சிகிச்சை செய்து தாய்- சேயை காப்பாற் றிய மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மூத்த வழக்கறிஞர் சி.பி.பகத்சிங் என்ப வரின் மருமகள் டாக்டர் ரம்யா நாராயணன் என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று உள்ள 2 கர்ப்பிணி பெண்ணிற்கு அறுவை சிகிச்சை  செய்து குழந்தைகளையும், தாயையும் காப்பாற்றினார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தனது குடும்பத்தை விட்டு ஒரு வார காலம் தனிமைப்படுத்தப்படுவார்கள், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு எளிதில் நோய் தொற்ற வாய்ப்புள்ளது என அறிந்தும் பணியாற்றும் டாக்டர் ரம்யா நாராயணன் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் மருத்து வர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு தூத்துக்குடி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

;