தூத்துக்குடி, மே 24- அருப்புக்கோட்டை அருகேயுள்ள பெரிய புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(48). தொழில்அதிபரான இவர் கார் வாங்குவதற்காக கோவில்பட்டியை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் என்பவரிடம் வங்கி மூலம் ரூ. 25 லட்சம் பணம் அனுப்பினார். ஆனால் ஆனந்தகிருஷ்ணன் கார் வாங்கி கொ டுக்கவில்லை. இதுகுறித்து கேட்டதில் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆனந்தகி ருஷ்ணன், கோவிந்தராஜை எட்டயபுரம் அருகேயுள்ள ஒரு கார் கம்பெனிக்கு வரும்படி கூறி தனது நண்பரான குளத்தூரை சேர்ந்த நாராயணன் மகன் சரவணகுமார் என்பவருடன் தனது காரில் ஆனந்தகிருஷ்ணன் சென்றுள்ளார். பைபாஸ் ரோட்டில் கோவிந்தராஜ் நின்று கொண்டிருந்ததை பார்த்து அவர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் படுகா யம் அடைந்த கோவிந்தராஜ் மதுரையிலுள்ள தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா வழக்குப்பதிந்து ஆனந்தகிருஷ்ணன், சர வணகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்கள் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தார்.