tamilnadu

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

தூத்துக்குடி, ஜூலை 28- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தே.முருகன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது. கொரோ னா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு நோய் தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாத காலமாக அரசு ஊழியர்கள் குறிப்பாக வருவாய்த் துறை ஊழியர்கள் இரவு பகல் பாராமல் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் மிகக் கடுமையாக பணிபுரிந்து வரு கிறார்கள். நோய்த்தொற்று ஏற்பட்டு சில ஊழியர்கள் இறந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளிலும் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களு டைய குடும்ப  உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் கடந்த 14.07.2020 அன்று ஐக்கிய அரபு எமி ரகத்தி லிருந்து வந்த 36 பேர் வாவு கல்லூரி யில் தனிமைப்படுத்தப்பட்டு  வைக்கப் பட்டுள்ளனர்.

அவர்களுக்கு 7 வது நாள் பரிசோதனை மாதிரி   எடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் பரிசோ தனை முடிவு வராத நிலையிலும் அரசு அலுவலர்களிடம் எவ்வித தகவ லும் தெரிவிக்காமலும்  வருவாய்த் துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினரிடம் எவ்வித அனுமதியும் பெறாமலும் கடைய நல்லூர் சட்டமன்ற உறுப்பினர்  கே.ஏ. எம்.முகம்மது அபுபக்கர்   மேற்படி நபர்களை வீட்டிற்கு அனுப்பிட வாகன ஏற்பாடுகள் செய்து அவர்க ளும் வாகனத்தில் ஏற்றப்பட்டனர். இத்தகவல் அறிந்து சுகாதாரத்துறை அலுவலர்களிடம் கலந்தாலோசித்து அரசு விதிகளின்படி பரிசோதனை முடிவின் அடிப்படையிலேயே 36 நபர்களையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினரிடம் வட்டாட்சிய ரால் அரசு விதிகள் தெரிவிக்கப்பட்டு விளக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த கடைய நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரசு விதிகளை மீறி 36 பேரையும் உட னடியாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தார். அன்றைய தினமே (21.07.2020) காயல்பட்டினத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளார்.

நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, கூட்டுறவுத்துறை, நகராட்சிப் பணியாளர்கள் என அனைத்து அரசுத்துறை ஊழியர்க ளையும் ஒருங்கிணைத்து வருவாய்த் துறை அலுவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையிலும், 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய சட்டமன்ற உறுப்பினர் அனுமதியின்றி தேவை யற்ற போராட்டங்களில் ஈடுபடுவது மக்களை பாதுகாக்கப் பயன்படாது. தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டிணம் பகுதியில் தான் கொரோனா பாதிப்பு முதலில் கண்ட றியப்பட்டு நோய்த் தொற்றை கட்டுக் குள் கொண்டு வர தடுப்பு பணிகள் அனைத்து துறையினரையும் ஒருங் கிணைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைசெயலாளரும் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச்செயலளாருமாகிய  திருச்செந்தூர் வட்டாட்சியர் ஞான ராஜ் தலைமையில் மேற்கொண்டு வரும் நிலையில் இதுபோன்ற பொய் யான புகார்களை தெரிவித்து அனு மதியின்றி தேவையற்ற ஆர்ப்பாட் டங்கள் நடத்துவது அரசு அலுவலர் கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் தொய்வினையும ஏற்படுத்தும். மேலும் கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு 4 மாத காலம் ஆகிய நிலையில் நாளதுவரை காயல்பட்டினம் பகுதி யில் உள்ள பொதுமக்களிடமி ருந்தோ, அப்பகுதியில் உள்ள வேறு அமைப்புகளிடமிருந்தோ எவ்வித புகார்களும் வரப்பெறவில்லை.  ஆகவே கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கரின் மேற்கண்ட நடவடிக்கை யின் மீது, தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் தலையீடு செய்து அரசு அலுவலர் கள் நலன் மற்றும் மக்கள் நலனை பாதுகாக்குமாறு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.