tamilnadu

img

கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.42,437 கோடி பயிர்க்கடன் திருச்செந்தூரில் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

தூத்துக்குடி, ஜூலை 14- கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயி களுக்கு ரூ.42 ஆயிரத்து 437 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கி யின் நூற்றாண்டு விழா சனியன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டுறவு நகர வங்கி தலை வர் கோட்டை மணிகண்டன் வரவேற்று பேசி னார். கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூட்டுறவு நகர வங்கியின் நூற்றாண்டு மலரை வெளியிட்டார். பின்னர் அவர், 623 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வங்கியின் பொதுநல நிதியில் இருந்து பயனாளிகளுக்கு ரூ.57 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 17 ஆயிரத்து 550 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தலை சிறப்பாக நடத்தினார். இதன்மூலம் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் நிர்வாகக்குழு உறுப்பி னர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இன்னும் சில கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதன்மூலம் 2 லட்சத்து 25 ஆயி ரம் பேர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வட்டி யில்லாமல் பயிர்க்கடன் வழங்கப்படு கிறது. திமுக ஆட்சி காலத்தில் விவசாயி களுக்கு ரூ.9 ஆயிரத்து 163 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் 82 லட்சத்து 47 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.42 ஆயி ரத்து 437 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து ஆயிரத்து 370 விவசாயிகளுக்கு ரூ.789 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.  அதிமுக ஆட்சிக்காலத்தில் 55 ஆயி ரத்து 415 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.221 கோடியே 53 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. 14 லட்சத்து 39 ஆயிரத்து 891 சிறு வியாபாரிகளுக்கு ரூ.1,643 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் சுய உத விக்குழுவினருக்கும் கடன் உதவி வழங்கப் படுகிறது. இதனால் கந்து வட்டிக்காரர்களி டம் சிக்கி தவித்த பொதுமக்களை அரசு மீட்டுள்ளது. திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கியில் 2 ஆயிரத்து 91 பேருக்கு ரூ.3 கோடியே 15 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு சார்பில் விவசாயி களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்தை 3 தவணைகளாக பிரித்து வழங்குகின்றனர். இதில் இந்தியாவிலேயே அதிகம் பயன் பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இங்கு 44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.844 கோடி வழங்க ஏற்பாடு செய்தவர் முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி. அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் அட்டை வழங்க மாவட்டஆட்சியர் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு தேவையான விவசாயி களின் கணக்கெடுப்பு தகவல்களை மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்க தயாராக உள்ளோம். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:  திருச்செந்தூருக்கும், கூட்டுறவுத் துறைக்கும் சம்பந்தம் உண்டு. ஏனெனில் நமது மண்ணின் மைந்தர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்து பல சாதனைகளை புரிந்தார். கூட்டுறவுத்துறையில் கடந்த 9 ஆண்டுகளாக அமைச்சர் செல்லூர் ராஜூ பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் வேலூருக்கு அடுத்தபடியாக திருச்செந்தூரில் உள்ள கூட்டுறவு வங்கி நூற்றாண்டு விழாவை கொண்டாடி பெருமை சேர்த்துள்ளது. தூத்துக்குடி பசுமை பண்ணை காய்கறி அங்காடியும் தமிழகத்திலேயே விற்பனை யில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப் பிரியா, தாசில்தார் தில்லைப்பாண்டி, கூட்டு றவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்த ராஜ், மண்டல இணை பதிவாளர் அருளரசு, அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டுறவு துணை பதிவாளர் சந்திரா நன்றி கூறினார்.